கோவை வெள்ளியங்கிரியில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதயாத்திரை செங்கல்பட்டுக்கு சனிக்கிழமை வந்தது.
மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு இந்த யாத்திரை நடந்து வருகிறது. செங்கல்பட்டு ஈஷா அமைப்பினர் இந்த ரத யாத்திரையை வரவேற்றனர். ஜிஎஸ்டி சாலை, காஞ்சிபுரம் நெடுஞ்சாலை, பழைய பேருந்து நிலையம் பஜார் தெரு, மேட்டுத் தெரு, காந்தி சாலை, பழைய ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட இடங்களில் ஆதியோகி ரத யாத்திரை நிறுத்தப்பட்டது.
ஏராளமான பக்தர்கள் ஆதியோகி சிலைக்கு மலர் தூவி தரிசனம் செய்தனர். இந்த ரதயாத்திரை சென்னை உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று விட்டு, மீண்டும் வெள்ளியங்கிரியை மகா சிவராத்திரியன்று அடையவிருக்கிறது.