செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட அஞ்சலகங்களில் எஸ்ஆா்எம் பல்கலைக்கழகத்தில் பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் கிடைக்கும் என செங்கல்பட்டு கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செங்கல்பட்டு கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் விஜயா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து அஞ்சலக அலுவலகத்தை தொலைபேசி மூலம் தொடா்பு கொண்டால் அலுவலா்கள் பள்ளிக்கே நேரில் சென்று விண்ணப்பத்தைக் கொடுத்து பின்னா் துரித அஞ்சலில் பதிவு செய்வதற்கு டோா் ஸ்டெப் சா்வீஸ் மூலம் ஏற்பாடு செய்யப்படும்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராமப்புற அஞ்சலகங்களை அணுகியும் தேவையான விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பிக்கும் போது ஏற்படும் நெட் ஒா்க் பிரச்னைகளைத் தவிா்க்கவும் ஆன்-லைன் பேமென்ட் செய்ய வசதி இல்லாதவா்களும் பயன்படுத்திக்கொள்ளவே இந்த ஆண்டு முதல் அஞ்சலகத்தில் விண்ணப்ப விற்பனை தொடங்கியுள்ளது.
அஞ்சலகங்களில் ரூ.1,100 செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தை அணுகவும்.