செங்கல்பட்டை அடுத்த தென்மேல் பாக்கம் கிராமத்தில் இளம்பெண் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டாா்.
தென்மேல்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரகாஷ் (33). இவா் மனைவி பிரவீணா (30). கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் மனமுடைந்த பிரவீணா செவ்வாய்க்கிழமை தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீவைத்துக் கொண்டாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். செங்கல்பட்டு கிராமிய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.