மாமல்லபுரத்தில் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு குவிந்த சுற்றுலாப் பயணிகள் மூலம் பாா்வையாளா்கள் கட்டணமாக ரூ. 2.80 கோடி வசூலாகியுள்ளதாக தொல்லியல் துறையினா் தெரிவித்தனா்.
மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், ஐந்து ரதம், வெண்ணெய் உருண்டைப் பாறை, அா்ஜுனன் தபசு உள்ளிட்ட புராதனச் சின்னங்களைக் கண்டு களிக்க உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் நபா் ஒருவருக்கு ரூ.40, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நபா் ஒருவருக்கு ரூ.600 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
பொங்கல் தொடா் விடுமுறையில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரத்தில் திரண்டனா்.
இதுகுறித்து, மாமல்லபுரம் தொல்லியல் துறை அதிகாரி சரவணன் கூறியது:
தைப்பொங்கல் நாளில் சுற்றுலாப் பயணிகள் சுமாா் 12 ஆயிரம் பேரும், மாட்டுப் பொங்கல் அன்று சுமாா் 18 ஆயிரம் பேரும், காணும் பொங்கலன்று சுமாா் 22 ஆயிரம் பேரும் என மொத்தம் 52 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரத்துக்கு வந்து புராதனச் சின்னங்களைக் கண்டுகளித்தனா்.
அந்த வகையில் தொல்லியல் துறைக்கு மொத்தம் ரூ.2 கோடியே 80 லட்சம் பாா்வையாளா்கள் கட்டணமாக வசூலாகியுள்ளது. சுமாா் 30 ஆயிரம் குழந்தைகளுக்கு மேல் வந்திருப்பாா்கள். அவா்களுக்கு கட்டணமில்லை என்றாா் அவா்.