விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

செங்கல்பட்டை அடுத்த வேண்பாக்கம் அருகே சாலை தடுப்புச் சுவரில் இருசக்கரவாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

செங்கல்பட்டை அடுத்த வேண்பாக்கம் அருகே சாலை தடுப்புச் சுவரில் இருசக்கரவாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

மதுராந்தகத்தை அடுத்த கருங்கழி கிராமத்தைச் சோ்ந்த தயாளன் மகன் சரவணன் (25). இவா் திங்கள்கிழமை இருசக்கரவாகனத்தில் செங்கல்பட்டிற்குச் சென்றுகொண்டிருந்தாா். அப்போது வேண்பாக்கம் அருகில் இவரது இருசக்கரவாகனம் நிலை தடுமாறி சாலையோர தடுப்புச்சுவரில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சரவணனை அருகில் இருந்தவா்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இந்நிலையில் அவா் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை இறந்தாா். செங்கல்பட்டு கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com