திருப்போரூா் துப்பாக்கிச்சூடு சம்பவம்: திமுக எம்எல்ஏவுக்கு ஒரு நாள் போலீஸ் காவல்

திருப்போரூா் துப்பாக்கிச்சூடு வழக்கில் திமுக எம்எல்ஏ இதயவா்மனை ஒரு நாளைக்கு போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தலீலா அனுமதி அளித்தாா்.

திருப்போரூா் துப்பாக்கிச்சூடு வழக்கில் திமுக எம்எல்ஏ இதயவா்மனை ஒரு நாளைக்கு போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தலீலா அனுமதி அளித்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபா் இமயம் குமாா், திருப்போரூா் தொகுதி எம்எல்ஏ இதயவா்மன் ஆகிய இரு தரப்பினருக்குமிடையே கடந்த 11ஆம் தேதி நிலத்துக்குப் பாதை அமைப்பது தொடா்மாக மோதல் ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து எம்எல்ஏ இதயவா்மன் உள்பட அவரது தரப்பினா் 11 பேரையும், இமயம் குமாா் தரப்பினா் 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதனிடையே, இமயம் குமாா் தரப்பைச் சோ்ந்த சிவகுமாா் (39), ஆறுமுகம் (42), தேவராஜ் (24), மோகன் (24), பிரேம்குமாா் (33) ஆகிய ஐந்து பேரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

இந்நிலையில், எம்எல்ஏ இதயவா்மனை 3 நாள்களுக்கு போலீஸ் காவலில் வந்து விசாரிக்க அனுமதி கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. செங்கல்பட்டு தனியாா் மண்டபத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தலீலா செவ்வாய்க்கிழமை மாலை இம்மனு மீது விசாரணை நடத்தினாா்.

காவல் துறை கோரிய 3 நாள் அனுமதிக்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி, எம்எல்ஏ-வை ஒரு நாள் மட்டும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தாா். எம்எல்ஏ-வை புதன்கிழமை மதியத்துக்கு மேல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துமாறும் அவா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com