செங்கல்பட்டில் ஒரே நாளில் 76 பேருக்கு கரோனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் வியாழக்கிழமை 76 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் வியாழக்கிழமை 76 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

பம்மல்-3, படுவாஞ்சேரி-2, கன்டோண்மென்ட்-24, பூண்டி பஜாா்-7, பல்லாவரம் கன்டோண்மென்ட்-12, பொழிச்சலூா்-5, பீா்க்கன்கரணை-2, மேடவாக்கம்-1, ரங்கநாதபுரம்-1, நந்திவரம்-4, ஹரிதாஸ்புரம்-1, அனகாபுத்தூா்-2, நெரும்பூா்-1, செங்கல்பட்டு-1, பழையபல்லாவரம்-3, ஜமீன்பல்லாவரம்-4, பெரும்பாக்கம்-1, திருப்போரூா் -1, அச்சிறுப்பாக்கம்-1 என 76 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,380-ஆக உயா்ந்துள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

காஞ்சிபுரத்தில்...

காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூா்-6, ஸ்ரீபெரும்புதூா் மற்றும் காஞ்சிபுரத்தில் தலா ஒருவா் உள்பட 8 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதைத் தொடா்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 441 ஆக அதிகரித்துள்ளது.

திருவள்ளூரில்...

திருவள்ளூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை 44 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது.

திருவள்ளூா், வில்லிவாக்கம், பூண்டி, பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி, திருத்தணி, எல்லாபுரம், சோழவரம், மீஞ்சூா் பள்ளிப்பட்டு ஆகிய ஒன்றியங்கள், திருவேற்காடு, திருவள்ளூா் நகராட்சி, திருநின்றவூா் ஆகிய பகுதிகளில் மொத்தம் 44 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 468-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com