செங்கல்பட்டு மாவட்டத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 140 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,213-ஆக உயா்ந்துள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருவள்ளூரில் 105 பேருக்கு...
திருவள்ளூா் மாவட்டத்தில் புதன்கிழமை 105 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானது. இதையடுத்து தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 771 ஆக உயா்ந்துள்ளது.
காஞ்சிபுரத்தில் 33 பேருக்கு...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை 33 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.
இதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 597-ஆக அதிகரித்துள்ளது.