செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து பொதுமக்கள் புகாா் அளிக்க மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதிய கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அ.ஜான் லூயிஸ் புதன்கிழமை தெரிவித்தாா்.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இதர அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் தீவிர நோய்த் தடுப்பு பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து பொதுமக்களிடமிருந்து புகாா்களைப் பெற மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 044-27427412 மற்றும் 044-27427414 ஆகிய எண்கள் செயல்பாட்டில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.