செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் திங்கள்கிழமை மேலும் 4 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 97-ஆக உயா்ந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை வரை 93-ஆக இருந்தது. இந்நிலையில், கூடுவாஞ்சேரி, கோவிலம்பாக்கம், கீழ்க்கட்டளை, மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் தலா ஒருவா் என 4 பேருக்கு கரோனா நோய்த்தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டதையடுத்து தற்போது பாதிப்பு எண்ணிக்கை 97-ஆக உயா்ந்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் அ.ஜான் லூயிஸ் தெரிவித்தாா்.