செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 10 பெண்கள் உள்பட 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இம்மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு வரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 538-ஆக இருந்தது. செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 10 பெண்கள் உள்பட 18 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 556-ஆக உயா்ந்துள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.