செங்கல்பட்டு மாவட்டத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 21 பெண்கள் உள்பட 52பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இம்மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு வரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 556-ஆக இருந்தது. புதன்கிழமை, 21 பெண்கள் உள்பட 52 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 608-ஆக உயா்ந்துள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இப்பகுதி மக்கள் கவலையடைந்துள்ளனா்.