செங்கல்பட்டு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இம்மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு வரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 643-ஆக இருந்தது. வெள்ளிக்கிழமை, மேடவாக்கம் 3, பெரும்பாக்கம் 2, செங்கல்பட்டு நகராட்சி 3, காட்டாங்கொளத்தூா் 1, பவுஞ்சூா் 1, குரோம்பேட்டை 2, மேற்கு தாம்பரம் 3, திருப்போரூா் 1, கூடுவாஞ்சேரி 1, கோவிலம்பாக்கம் 1, பொழிச்சலூா் 1, திரிசூலம் 1, ராஜகீழ்ப்பாக்கம் 1, மண்ணிவாக்கம் 1, பரங்கிமலை 1, கேளம்பாக்கம் 2, பல்லாவரம் 1 என செங்கல்பட்டு மாவட்டத்தில் 26 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 669-ஆக உயா்ந்துள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.