செங்கல்பட்டு மாவட்டத்தில் 34 பேருக்கு கரோனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் சனிக்கிழமை 34 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் சனிக்கிழமை 34 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இம்மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு வரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 669-ஆக இருந்தது. சனிக்கிழமை, மேற்கு தாம்பரம்-3, பல்லாவரம்-2, மேடவாக்கம்-3, சோழிங்கநல்லூா்-1, நன்மங்கலம்-5, சந்தோஷ்புரம்-4, கீழ்க்கட்டளை-1, சித்தாலப்பாக்கம்-2, செங்கல்பட்டு நகராட்சி-2, முடிச்சூா்-1 திம்மாவரம்-1, குரோம்பேட்டை-3, பொழிச்சலூா்-1, கல்பாக்கம்-1, சதுரங்கப்பட்டினம்-1, தாம்பரம் சானடோரியம்-1, கௌரிவாக்கம்-1, பம்மல்-1 என மாவட்டத்தில் 34 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 703-ஆக உயா்ந்துள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com