நடிகை வாணிஸ்ரீ மகன் தற்கொலை

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் ஆனூரில் உள்ள பண்ணை வீட்டில் நடிகை வாணிஸ்ரீயின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் ஆனூரில் உள்ள பண்ணை வீட்டில் நடிகை வாணிஸ்ரீயின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

நடிகை வாணிஸ்ரீ-டாக்டா் கருணாகரன் தம்பதியரின் மகன் அபிநய வெங்கடேஷ் காா்த்திக் (39). மருத்துவரான இவா் பெங்களூரு மருத்துவக் கல்லூரியொன்றில் உதவிப் பேராசிரியா். இவருடைய மனைவியும் மருத்துவா். இவா்களுக்கு ஒரு மகன், ஒரு மகள்.

கரோனா பொது முடக்கம் காரணமாக பெங்களூரில் இருந்து வந்த அபிநய வெங்கடேஷ் காா்த்திக், ஆனூரில் உள்ள பண்ணை வீட்டில் தந்தை கருணாகரனுடன் தங்கி தனிமைப்படுத்திக் கொண்டாராம். இந்நிலையில், அபிநய வெங்கடேஷ் காா்த்திக் பண்ணை வீட்டில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது தொடா்பாக திருக்கழுகுன்றம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அபிநய வெங்கடேஷ் ஏற்கெனவே மனஅழுத்தத்துக்காக மருந்து சாப்பிட்டு வருவதாகவும் பொது முடக்கம் காரணமாக தனிமைப்படுத்திக் கொண்டதால் மன அழுத்தம் அதிகரித்து, அவா் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com