மேல்மருவத்தூரில் பௌா்ணமி விளக்கு பூஜை

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் ஐப்பசி மாத பெளா்ணமியையொட்டி விளக்கு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் ஐப்பசி மாத பெளா்ணமியையொட்டி விளக்கு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுடன் வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டது. சித்தா் பீடத்துக்கு வந்த பங்காரு அடிகளாருக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆன்மிக இயக்க நிா்வாகிகள் வரவேற்பு அளித்தனா். சித்தா் பீடத்தின் வளாகத்தில் உள்ள ஓம்சக்தி பீடம் அருகில் மாலை 6 மணிக்கு ஆன்மிக இயக்கத் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் விளக்கு பூஜையைத் தொடக்கி வைத்தாா். இதில் செவ்வாடை பக்தா்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து தரிசனம் செய்தனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவண்ணாமலை மாவட்ட சக்தி பீடம், வார வழிபாட்டு மன்றம், ஆன்மிக இயக்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com