செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆட்சியா்களுக்கு கரோனா

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அ.ஜான்லூயிஸுக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா் சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிட்யூட் கரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஆட்சியா் மகேஸ்வரி சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் அவா் கரோனா தொற்றிலிருந்து குணமடைவாா் என எதிா்பாா்ப்பதாகவும் மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com