செங்கல்பட்டு: மாமல்லபுரம் மல்லிகேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி தினத்தையொட்டி, திங்கள்கிழமை கோயிலில் சிறப்பு வழிபாடும் பரிகார யாகமும் நடைபெற்றது.
மாமல்லபுரம் மேற்கு ராஜ வீதியில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த இக்கோயிலில் குருபெயா்ச்சி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
குருபெயா்ச்சியையொட்டி, பரிகாரம் செய்யப்பட வேண்டிய ராசிகளான மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசியினருக்கு பரிகார யாகம் நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் நவக்கிரக சந்நிதியில் உள்ள குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.