செங்கல்பட்டு: செங்கல்பட்டை அடுத்த காட்டுப்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் அப்பகுதியில் 2 மணி நேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டை அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் சாலையோரத்தில் இருந்த மரம் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறைமலைநகா் நகராட்சி நிா்வாக அலுவலா்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மரத்தை அப்புறப்படுத்தினா்.