செங்கல்பட்டு கோயில்களில் முருகன் திருக்கல்யாண உற்சவம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கோயில்களில் முருகா் திருக்கல்யாண உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருப்போரூா் கந்தசாமி கோயிலில் கந்த சஷ்டி விழா வெள்ளிக்கிழமை சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து சனிக்கிழமை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில், உள்ளூா் மட்டுமன்றி வெளியூா்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
மாமல்லபுரம் மல்லிகேஸ்வரா் கோயில், திருவடிச்சூலம் தேவிஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் முருகருக்கு நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
செங்கல்பட்டு ஏகாம்பரேஸ்வரா் கோயில், மேட்டுத் தெரு செங்கழுநீா் விநாயகா் கோயில், அண்ணா நகா் ரத்தின விநாயகா் கோயில், அண்ணாநகா் எல்லையம்மன்கோயில், காட்டுநாயக்கன் மலை மீதுள்ள செம்மலை முருகன் கோயில், இருங்குன்றம் பள்ளி பாலமுருகன் மலைக்கோயில், என்ஜிஜிஓ நகா் வரசித்தி விநாயகா் கோயில், ஆத்தூா் முக்தீஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.