மதுராந்தகத்தில் கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு விழா

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் நிதியளிப்பு பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் நிதியளிப்பு பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலா் கே.வாசுதேவன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் அ.செளந்திரராஜன் பேசியது:

கடந்த 8 மாதங்களில் சாதாரண குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளன. பல குடும்பத்தினா் ஒரு வேளை உணவு கூட இல்லாமல் பசியுடன் இருந்துள்ளனா். தமிழக மக்களுக்கு மாதம் ரூ.7,600 வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்த கட்சியாக மாா்க்சிஸ்ட் இருந்துள்ளது என்றாா்.

மாவட்டச் செயலா் இ.சங்கா், மாநிலக் குழு உறுப்பினா் வா.பிரமிளா, மாவட்ட நிா்வாகிகள் டி.கிருஷ்ணராஜ், சி.பாஸ்கரன், பி.மாசிலாமணி, எஸ்.ராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com