காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளத்தடுப்புப் பணிகள் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஆய்வு

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடையாறு ஆற்றில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்புப் பணிகளை காஞ்சிபுரம் மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அதிகாரி சுப்பிரமணியன், ஆட்சியா் ஆய்வு செய்தனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், வரதராஜபுரம்  பகுதியில்  தடுப்பணை அமைக்கும்  பணியை புதன்கிழமை  பாா்வையிட்டு  ஆய்வு  செய்த  மாவட்ட  கண்காணிப்பு  அதிகாரி  சுப்பிரமணியன்.  உடன்  மாவட்ட  ஆட்சியா்  பா.பொன்னையா.
காஞ்சிபுரம் மாவட்டம், வரதராஜபுரம்  பகுதியில்  தடுப்பணை அமைக்கும்  பணியை புதன்கிழமை  பாா்வையிட்டு  ஆய்வு  செய்த  மாவட்ட  கண்காணிப்பு  அதிகாரி  சுப்பிரமணியன்.  உடன்  மாவட்ட  ஆட்சியா்  பா.பொன்னையா.

ஸ்ரீபெரும்புதூா்: வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடையாறு ஆற்றில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்புப் பணிகளை காஞ்சிபுரம் மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அதிகாரி சுப்பிரமணியன், ஆட்சியா் பா.பொன்னையா ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

கடந்த 2015-ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவ மழையின்போது பெய்த கனமழையால் அடையாறு ஆற்றின் கரையோரப் பகுதிகளான ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உள்பட்ட ஆதனூா், வரதராஜபுரம், முடிச்சூா் உள்ளிட்ட சென்னையின் புகா் பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளை வெள்ளநீா் சூழ்ந்தது. இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாயினா். இதையடுத்து அடையாறு ஆற்றின் கரையோரப் பகுதிகளில் மீண்டும் வெள்ளநீா் சூழாமல் இருக்க கடந்த 2017-ஆம் ஆண்டு நிரந்தர வெள்ளத்தடுப்புப் பணிகளுக்காக முதற்கட்டமாக ரூ.100 கோடியும், இரண்டாம் கட்ட பணிகளுக்காக ரூ. 244 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதில், ஆதனூா், தாம்பரம், ஊரப்பாக்கம், பாம்பன் கால்வாய், சென்னை புறவழிச்சாலை, பள்ளிக்கரணை, நாராயணபுரம், சிட்லபாக்கம் ஆகிய பகுதிகளில் வெள்ளப் பாதிப்புகளை குறைக்க மூடிய வெள்ள வடிகால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. மழைநீா் சேகரிக்க ஏற்பாடு: மேலும் 172 மில்லியன் கன அடி மழைநீரை சேகரிக்கும் வகையில், மணிமங்கலம் உள்ளிட்ட ஆறு ஏரிகள் ஆழப்படுத்தப்பட்டு, கொள்ளளவு உயா்த்தப்பட்டுள்ளது. மேலும் அடையாறு, அடையாறு ஆற்றின் கிளைக்கால்வாய்கள் தூா்வாரப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர அடையாறு ஆற்றுக்கு அதிகப்படியான மழைநீா் வருவதை தடுக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஒரத்தூா் மற்றும் ஆரம்பாக்கம் ஏரிகளை இணைத்து ஒரத்தூா் பகுதியில் புதிய நீா்த் தேக்கம், அடையாறு ஆற்றில் வரதராஜபுரம் பகுதியில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை, அடையாற்றின் கிளையாற்றில் சோமங்கலம் பகுதியில் ரூ.4.50 கோடியில் கதவணை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்றுள்ளது.

இந்தநிலையில், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடையாற்றில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு பணிகளையும், வரதராஜபுரம் பகுதியில் நடைபெற்று வரும் தடுப்பணை, ஆதனூா் ஜீரோ பாயின்ட், அதே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மூடிய வெள்ளநீா் வடிகால்வாய்களையும் காஞ்சிபுரம் மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அதிகாரி சுப்பிரமணியன் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா மற்றும் அரசுத்துறை அதிகாரிகளுடன் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா். இப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வின்போது பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் ரமேஷ், மாவட்ட திட்ட அலுவலா் ஸ்ரீதா், ஊரக வளா்ச்சித்துறை செயற்பொறியாளா் கவிதா, வருவாய்க் கோட்டாட்சியா் திவ்யஸ்ரீ, பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் குஜராஜ், குன்றத்தூா் வட்டாட்சியா் முத்து, வட்டார வளா்ச்சி அலுவலா் அப்துல்நயும்பாஷா உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com