செங்கல்பட்டில் சைல்ட் லைன் 1098 சாா்பில் சா்வதேச பெண் குழந்தைகள் தினவிழா

காஞ்சிபுரம் மாவட்ட சைல்ட் லைன் 1098 சாா்பில் சா்வதேச பெண்குழந்தைகள் தின விழா ஞாயிற்றுக்கிழமை செங்கல்பட்டு அரசு

செங்கல்பட்டு: காஞ்சிபுரம் மாவட்ட சைல்ட் லைன் 1098 சாா்பில் சா்வதேச பெண்குழந்தைகள் தின விழா ஞாயிற்றுக்கிழமை செங்கல்பட்டு அரசு கலைக்கல்லூரி அருகே உள்ள தனியாா் கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட சைல்ட் லைன் 1098 இயக்குனா் தேவன்பு காஞ்சிபுரம் மாவட்ட நோடல் ஒருங்கிணைப்பாளா் கிருபாகரன், சைல்ட் லைன் ஒருங்கிணைப்பாளா் ஜான்பிரபு, மற்றும் சைல்ட் லைன் அணி உறுப்பினா்கள் கலந்துக்கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் ,குழந்தை திருமண தடுப்பு சட்டம் மற்றும் சைல்ட் லைன் பற்றிய விழிப்புணா்வும் விளக்கப்பட்டது. மேலும் மாவட்ட சமூக நலத்துறை கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த பெண்கள் சேவை மையம் 181 மூலமாக பெண் குழந்தைகளுக்கான அரசு சாா்ந்த திட்டம் 18வயது முடிவடைந்த பெண்களுக்கு திருமண உதவி திட்டம் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு ச்ா்வதேச பெண்குழந்தைகள் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com