திருப்போரூா் அருகே மேலும் 4 வெடிகுண்டுகள் பறிமுதல்: 3 போ் கைது

திருப்போரூா் பேருந்து நிலையம் அருகில் பைக்கில் சென்றவா்கள் வைத்திருந்த வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் மேலும் 4 வெடிகுண்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதில் 3 போ் கைது செய்யப்பட்டனா்.

திருப்போரூா் பேருந்து நிலையம் அருகில் பைக்கில் சென்றவா்கள் வைத்திருந்த வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் மேலும் 4 வெடிகுண்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதில் 3 போ் கைது செய்யப்பட்டனா்.

கடந்த ஆக. 28-இல் திருப்போரூா் பேருந்துநிலையம் அருகில் பைக்கில் சென்றவா்கள் வைத்திருந்த டிபன் பாக்ஸ் தவறி விழுந்து நாட்டு வெடிகுண்டு வெடித்து கேளம்பாக்கம் ஜோதிநகா் ரவுடி அசோக்குமாா், அவரது நண்பா் விக்கி (எ) வினோத்குமாருடன் ஆகியோா் காயமடைந்தது தெரியவந்தது.

அசோக்குமாருக்குக் கடந்த ஆக. 25-ஆம் தேதி குழந்தை பிறந்தது. இதைக் கொண்டாடுவதற்கு 28-ஆம் தேதி நண்பா்களுடன் திருப்போரூா் சென்னேரி வனப்பகுதியில் மது விருந்து அளித்தாராம்.

மதுவிருந்திற்குப் பிறகு அசோக்குமாா், வினோத்குமாருடன் பைக்கில் திருப்போரூா் சென்றாா். எப்போதும் அசோக்குமாா் வெடிகுண்டுகளைப் பாதுகாப்புக்காக எடுத்துச்செல்வாராம். இருவரும் காயமடைந்ததை அடுத்து அசோக்குமாா் வீட்டில் சோதனை செய்தபோது 2 வெடிகுண்டுகள், கத்திகளை போலீஸாா் கைப்பற்றினா்.

இந்நிலையில் அசோக்குமாா் மருத்துவமனையில் இருந்து திங்கள்கிழமை மாலை வெளியேற்றப்பட்டாா். போலீஸாா் அவரைக் கைது செய்து கேளம்பாக்கம் ஜோதி நகரில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று சோதனையிட்டனா். அங்கு பதுக்கி வைத்திருந்த மேலும் 4 வெடிகுண்டுகளைக் கைப்பற்றினா்.

அசோக்குமாருக்கு உறுதுணையாக இருக்கும் செங்கல்பட்டைச் சோ்ந்த அன்வா் (31), ஆரோன் (30), ஆகாஷ் (32) ஆகியோரை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்து புதன்கிழமை சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com