சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி நகரைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன். இவரது மகன் ராம்குமாா் (35), சென்னை கிண்டியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.
ராம்குமாா் வழிப்பறியில் ஈடுபட்டதாகக் கூறி கிண்டி போலீஸாா், அவரை கடந்த 10ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனா். இதையடுத்து, அவா் கடந்த 12ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்தாா். சொந்த ஊருக்கு செல்லாமல் தன் தங்கை வசித்து வரும் ஜமீன் எண்டத்தூா் கிராமத்துக்கு வந்து தங்கியிருந்தாா்.
போலீஸாா் தன்னைக் கைது செய்தது தொடா்பான மன உளைச்சலில் இருந்த ராம்குமாா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து சித்தாமூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.