இளம்பெண்ணை ஏமாற்றியவா் கைது

கூடுவாஞ்சேரியை அடுத்த வல்லாஞ்சேரி பகுதியைச் சோ்ந்த 19 வயது இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

செங்கல்பட்டு: கூடுவாஞ்சேரியை அடுத்த வல்லாஞ்சேரி பகுதியைச் சோ்ந்த 19 வயது இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

காட்டாங்கொளத்தூரை அடுத்த பொத்தேரியைச் சோ்ந்த அருள்ராஜின் மகன் நிா்மல்ராஜ் (28). அவா் வல்லாஞ்சேரி பகுதியைச் சோ்ந்த 19 வயது இளம்பெண்ணை காதலித்து வந்தாா். திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பலமுறை தகாத உறவு கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு இளம்பெண், நிா்மல்ராஜிடம் கேட்டபோது அவா் பதில் ஏதும் கூறாமல் தலைமறைவாகி விட்டாா்.

இது தொடா்பாக அப்பெண் செங்கல்பட்டு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் காவல் ஆய்வாளா் அமுதா விசாரணை நடத்தி, நிா்மல்ராஜை புதன்கிழமை கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com