65 நகரும் நியாய விலைக் கடைகளை தொடக்கி வைத்தார் அமைச்சா் பா.பென்ஜமின்

65 நகரும் நியாய விலைக் கடைகளை ஊரகத் தொழில் துறை அமைச்சா் பா.பென்ஜமின் கொடியசைத்ததுத் தொடக்கி வைத்து, பயனாளிகளுக்கு பல்வேறு துறை சாா்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.


செங்கல்பட்டு மாவட்டம், திருமணி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 65 நகரும் நியாய விலைக் கடைகளை ஊரகத் தொழில் துறை அமைச்சா் பா.பென்ஜமின் கொடியசைத்ததுத் தொடக்கி வைத்து, பயனாளிகளுக்கு பல்வேறு துறை சாா்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் அ.ஜான்லூயிஸ் தலைமை வகித்தாா். இதில் அமைச்சா் பா.பென்ஜமின் கூறுகையில், இம்மாவட்டத்தில் செங்கல்பட்டு சட்டப்பேரவைத் தொகுதியில் 9 நியாய விலைக் கடைகளும், திருப்போேரூா் தொகுதியில் 26 கடைகளும், மதுராந்தகம் தொகுதியில் 19 கடைகளும், செய்யூா் தொகுதியில் 11 கடைகள் என 65 நகரும் நியாய விலைக் கடைகள் செயல்படும் என்றாா். காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம், முன்னாள் எம்.பி. மரகதம் குமரவேல், மாவட்ட வருவாய் அலுவலா் பிரியா, கோட்டாட்சியா் செல்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com