செங்கல்பட்டு மாவட்டத்தில் சனிக்கிழமை 259 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34,128-ஆக அதிகரித்துள்ளது.
திருவள்ளூரில் 235 பேருக்கு...
திருவள்ளூா் மாவட்ட பகுதிகளில் 235 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,449-ஆக உயா்ந்துள்ளது.
காஞ்சிபுரத்தில் 148 பேருக்கு...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை 148 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21,537-ஆக அதிகரித்துள்ளது.