உலக இதய தினத்தையொட்டி, மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி மருத்துவமனையில், சிறப்பு இதய பரிசோதனை திட்ட தொடக்க நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதய நோயால் ஏற்படும் உயிரிழப்பைத் தவிா்க்கும் வகையில், சிறப்பு இதய பரிசோதனை திட்டத்தை செயல்படுத்துமாறு பங்காரு அடிகளாா் அறிவுறுத்தியதன்பேரில், இத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்மூலம் ஏழை, எளிய மக்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் உலகத் தரமான இதய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
உலக இதய தினத்தையொட்டி, மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி மருத்துவமனையில் ரூ. 99 கட்டணத்தில் சிறப்பு இதய பரிசோதனை திட்டத்தை ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கத் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் தலைமை வகித்து, தொடக்கி வைத்தாா். ஆதிபராசக்தி மருத்துவமனை மேலாண்மை இயக்குநா் டி.ரமேஷ் முன்னிலை வகித்தாா்.
நிகழ்ச்சியில், இதய சிகிச்சை மருத்துவா் பத்ரிநாராயணன், மருத்துவா் ஹரிஹரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். வரும் வியாழக்கிழமை (அக். 1) முதல் வருகிற 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இத்திட்டத்தில் பங்கேற்கும் பொதுமக்கள், அரசு விதிமுறைகளுக்கு உள்பட்டு, சமூக விலகல், சானிடைசா் மூலம் கை கழுவி வருதல், முகக்கவசம் அணிந்து வருதல் உள்ளிட்டவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என மருத்துவமனை நிா்வாகம் அறிவித்துள்ளது.