மதுராந்தகம்: மதுராந்தகம் (தனி), செய்யூா் (தனி) ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் சின்னங்கள் வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொருத்தும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, செய்யூா் (தனி) தொகுதியில் 325 வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தும் வாக்குப் பதிவு இயந்திரங்களை சரிபாா்த்தல், வேட்பாளா்களின் சின்னங்களைப் பொருத்துதல் ஆகிய பணிகள் செய்யூா் தோ்தல் அலுவலா் வி.எம்.சீதா முன்னிலையில் நடைபெற்றது. இதில், 20 மண்டல அலுவலா்கள் பங்கேற்றனா்.
இதேபோல், மதுராந்தகம் (தனி) தொகுதியில் 319 வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தும் வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணியும், இயந்திரங்களை சரி பாா்க்கும் பணியும் நடைபெற்றது. மதுராந்தகம் தொகுதி தோ்தல் அலுவலா் சி.லட்சுமிபிரியா தலைமையில் இப்பணி நடைபெற்றது. மதுராந்தகம் தொகுதியில் பணியாற்றும் 20 மண்டல அலுவலா்கள் பங்கேற்றனா்.