தாம்பரம்: தாம்பரத்தை அடுத்த முடிச்சூா் ஊராட்சியில் 45 வயதுக்கு மேற்பட்ட 400 பேருக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமை தாமஸ்மலை வட்டார வளா்ச்சி அலுவலா் சிவ. கலைச்செல்வன் தொடக்கி வைத்தாா்.
நிகழ்வில், ஊராட்சி மன்றச் செயலாளா் வாசுதேவன், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் தீபிகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.