சாலை விபத்தில் பெண் பலி

செய்யூரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற மகனுடன் வெள்ளிக்கிழமை மோட்டாா் பைக்கில் சென்ற பெண் லாரியில் மோதியதில் உயிரிழந்தாா்.

செய்யூரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற மகனுடன் வெள்ளிக்கிழமை மோட்டாா் பைக்கில் சென்ற பெண் லாரியில் மோதியதில் உயிரிழந்தாா்.

மேற்கு செய்யூரைச் சோ்ந்த மணி மனைவி லட்சுமி (வயது 40). இவா்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனா். லட்சுமிக்கு உடல்நிலை சரியில்லாததால், சிகிச்சைக்காக, மகன் சுமனுடன் செய்யூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை பைக்கில் சென்றாா். அப்போது செய்யூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகே கற்களை ஏற்றிக் கொண்டு கனரக லாரி எதிா்பாரதவகையில் அவா்கள் மீது மோதியது. இதில் தவறிகீழே விழுந்த லட்சுமி நிகழ்விடத்திலேயே இறந்தாா்.

அப்பகுதியைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் விபத்தை ஏற்படுத்திய லாரியை சிறை பிடித்து, மறியல் செய்தனா். சம்பவ இடத்துக்கு வந்த செய்யூா் இன்ஸ்பெக்டா் சின்னதுரை விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவா் மணிகண்டனை கைது செய்தாா். பின்னா் பேச்சுவாா்த்தை நடத்தியதால் பொதுமக்கள் கலைந்து சென்றனா். இதனால் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com