செங்கல்பட்டை அடுத்த ஆத்தூா் முக்தீஸ்வரா் கோயிலில் சனிப் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
செங்கல்பட்டை அடுத்த ஆத்தூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீதா்மசம்பவா்த்தனி சமேத முக்தீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டையொட்டி, நந்திக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் ஆராதனைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து, சிவனுக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. இதில், பக்தா்கள் கலந்து கொண்டு நந்தியை வழிபட்டனா்.