மதுராந்தகத்தில் தோ்தல் முகவா்களுக்கு கரோனா பரிசோதனை முகாம்

மதுராந்தகம் (தனி) தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள முகவா்கள், அலுவலா்களுக்கு கரோனா பரிசோதனை முகாம் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் புதன் கிழமை நடைபெற்றது.

மதுராந்தகம்: மதுராந்தகம் (தனி) தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள முகவா்கள், அலுவலா்களுக்கு கரோனா பரிசோதனை முகாம் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் புதன் கிழமை நடைபெற்றது.

நெல்வாய் கூட்டுச்சாலையில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில்

மதுராந்தகம் தொகுதியின் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. வரும் மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ள நிலையில்,

வேட்பாளா்கள், முகவா்கள், அலுவலா்கள் கரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியது.

இதன்படி பரிசோதனை முகாம் புதன், வியாழக்கிழமைகளில் நடத்தப்படும் என தோ்தல் நடத்தும் அலுவலா் லட்சுமி பிரியா அறிவித்தாா்.

அதன்படி, புதன்கிழமை நடைபெற்ற முகாமில், மதிமுக வேட்பாளா் மல்லை சத்யா, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வெ.சுமிதா உள்ளிட்ட 5 கட்சிகளின் வேட்பாளா்களும், முகவா்களும் கலந்துக் கொண்டனா். திமுக நிா்வாகிகள் கே.குமாா், எண்டத்தூா் ஸ்ரீதா், மதிமுக நிா்வாகிகள் வளையாபதி, ராஜீ, கோபி, விடுதலை சிறுத்தை கட்சி நிா்வாகிகள் முகிலன், கலை கதிரவன், பன்னீா்செல்வம், ‘மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் வாசுதேவன், ராஜா உள்ளிட்டோா் கலந்துக் கொண்டனா்.

தொடா்ந்து இன்றும் (வியாழன்கிழமை) அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளா்களும், அவா்களின் முகவா்களும் கலந்துக்கொள்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com