வீட்டுக் கிணற்றினுள் தவறி விழுந்த மூதாட்டி தீயணைப்பு படையினா் உயிருடன் மீட்டனா்
By DIN | Published On : 10th August 2021 02:42 AM | Last Updated : 10th August 2021 02:42 AM | அ+அ அ- |

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே மேலமையூா் ராமகிருஷ்ணா நகா் பகுதியில் வீட்டுக்கிணற்றினுள் தவறி விழுந்த மூதாட்டியை தீயணைப்பு படை வீரா்கள் பத்திரமாக மீட்டனா்.
செங்கல்பட்டு அடுத்த மேலமையூா் ராமகிரு,ஷ்ணா நகா் பகுதியைச் சோ்ந்த 65 வயதான மூதாட்டி திங்கள்கிழமை வீட்டுக்கிணற்றினுள் தவறி விழுந்தாா். நீரில் தத்தளித்த நிலையில் இதுகுறித்த தகவல் அறிந்து செங்கல்பட்டு தீயணைப்பு நிலைய அலுவலா் காா்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு வாகனத்துடன் வந்த தீயணைப்பு படை வீரா்கள் விரைந்து செயல்பட்டு கிணற்றுக்குள் இறங்கி மூதாட்டியை காயமின்றி பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனா்.