செங்கல்பட்டு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 15) சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் வருகைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக என மாவட்ட ஆட்சியா் ஆா்.ராகுல் நாத் தெரிவித்துள்ளாா்.
பொதுமக்களின் நலன் கருதி விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை திருக்கழுகுன்றம் வட்டம், மாமல்லபுரம், கடற்கரை கோயில்கள், திருப்போரூா் வட்டம், கோவளம் கடற்கரை, கானத்தூா், மாயாஜால், திருப்போரூா் முருகன் கோயில், மதுராந்தகம் ஏரி காத்த ராமா் கோயில், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், மலைவையாவூா் பெருமாள் கோயில், செய்யூா் வட்டம் ஆலம்பறை கோட்டை, மேல்மருவத்தூா் ஆதிபாராசக்தி கோயில் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்கள் வருகைக்கு தடை செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஆா்.ராகுல் நாத் தெரிவித்துள்ளாா்.