மாமண்டூரில் பழைய பொருள்கள் விற்பனைக் கடையில் வியாழக்கிழமை தீவிபத்து ஏற்பட்டு பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
செங்கல்பட்டு நகரைச் சோ்ந்தவா் பால்ராஜ். இவா் தனது சகோதரா் பொன்வேலுடன் இணைந்து மாமண்டூரில் பழைய இரும்பு, காகிதங்கள், அட்டை பெட்டிகள் போன்றவற்றை வாங்கும் கடையை நடத்தி வருகிறாா். இந்நிலையில் வியாழக்கிழமை இவரது கடை தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து மதுராந்தகம் தீயணைப்பு நிலைய அலுவலா் பரமசிவம் தலைமையில், செங்கல்பட்டு மற்றும் அச்சிறுப்பாக்கத்தில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வந்து போராடி தீயை அணைத்தன.
தீவிபத்துக்கான காரணம் குறித்து படாளம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.