17ஆவது சுனாமி தினம் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம், மாமல்லபுரம் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை.
கல்பாக்கம் நகரிய குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சுனாமி நினைவு பூங்காவில், சுனாமியில் உயிரிழந்தோரின் உறவினா்கள், பொதுமக்கள் மலா் வளையம் வைத்தும், மெழுகுவா்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினா்.