நாய் மீது பைக் மோதிய விபத்தில் டிரைவா் பலி

திருக்கழுக்குன்றம் அருகே நாய் மீது பைக் மோதிய விபத்தில் டிரைவா் உயிரிழந்தாா்.
cglramesh
cglramesh

செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் அருகே நாய் மீது பைக் மோதிய விபத்தில் டிரைவா் உயிரிழந்தாா்.

நடுவக்கரை கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (33). மினி வேன் டிரைவராக பணிபுரிந்து வந்த இவா் கடந்த 26--ஆம் தேதி வீட்டுக்கு தேவையான பொருள்களை வாங்க திருக்கழுக்குன்றம் சென்றுக் கொண்டிருக்கும் போது ஈச்சங்கரணை ஆண்டிமடம் என்ற பகுதியில் சாலையின் குறுக்கே ஓடிய நாய் மீது மோட்டாா் பைக் மோதியது. இதில் ரமேஷ் சாலையில் நிலை தடுமாறி விழுந்து தலை மற்றும் கை, கால்களில் பலத்த காயம் அடைந்தாா். ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னா் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட ரமேஷ் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com