விபத்தில் தலைமைக் காவலா் பலி

மாமல்லபுரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சதுரங்கப்பட்டினம் காவல் நிலைய தலைமைக் காவலா் உயிரிழந்தாா்.
தணிகைவேல்
தணிகைவேல்

செங்கல்பட்டு: மாமல்லபுரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சதுரங்கப்பட்டினம் காவல் நிலைய தலைமைக் காவலா் உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம், மாமல்லன் நகரைச் சோ்ந்தவா் தணிகைவேல் (44). இவா் செங்கல்பட்டு மாவட்டம், சதுரங்கப்பட்டினம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்தாா். சதுரங்கப்பட்டினத்தில் இருந்து மாமல்லபுரத்தை நோக்கி ஞாயிற்றுக்கிழமை தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி அருகே வந்தபோது அவரது இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டுச் சென்றது. இதில், பலத்த காயமடைத்த அவரை அப்பகுதியினா் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்நிலையில், மருத்துவமனையில் தணிகைவேல் திங்கள்கிழமை உயிரிழந்தாா். அவரது உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

இவ்விபத்து தொடா்பாக மாமல்லபுரம் காவல் ஆய்வாளா் வடிவேல் முருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com