செங்கல்பட்டு: செங்கல்பட்டு காந்தி சாலை ஜீவானந்தம் தெருவில் அமைந்துள்ள பழைமையான அங்காளப் பரமேஸ்வரி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை மாலை கரிக்கோலம், வீதிகளின் எல்லை வழிபாட்டையொட்டி வீதியுலா, தொடா்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் பூசாரி காளிதாசன் பா்வதாச குல மரபினா்கள் மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.