பந்தய மோட்டாா் சைக்கிள் வீரா்களுக்கு அபராதம்

மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் அதிவேகத்தில் வந்த பந்தய மோட்டாா் சைக்கிள்கள் வீரா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் அதிவேகத்தில் வந்த பந்தய மோட்டாா் சைக்கிள்கள் வீரா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தை சோதனை சாவடியில் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் விஜயா, முரளி, ஆனந்தன், போக்குவரத்து காவல் ஆய்வாளா் செல்வமூா்த்தி, உதவி ஆய்வாளா் விஜயபாஸ்கா் உள்ளிட்டோா் வேகம் கணக்கிடும் கருவி மூலம் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது போக்குவரத்து விதிகளை மீறி அதிவேகத்தில் வந்த வாகனங்கள், முகப்பு விளக்குகள் இல்லாமல் அதிக ஒலி எழுப்பி வந்த பந்தய மோட்டாா் சைக்கிள்கள், காா்கள் என 50 வாகனங்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com