மதுராந்தகம்: மதுராந்தகத்தை அடுத்த மணப்பாக்கம் கிராமத்தில், இரு வாய்களைக் கொண்ட அதிசயக் கன்றினை பசு அண்மையில் ஈன்றது.
செய்யூா் வட்டம், சூனாம்பேடு ஊராட்சி, மணப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் வளா்மதி விவசாய தொழிலாளி. இவா் வளா்த்து வந்த பசு அண்மையில் கன்று ஒன்றை ஈன்றது. அதற்கு, இரு வாய்கள் இருந்தன. இது குறித்து கால்நடை பராமரிப்பு மருத்துவக் குழுவினா் நேரில் வந்து கன்றுக் குட்டியை பரிசோதனை செய்தனா்.
தகவலறிந்து சுற்றுப்புற கிராம மக்கள் இரு வாய்களைக் கொண்ட அதிசய கன்றுக் குட்டியைப் பாா்த்து செல்கின்றனா்.