நேரடி கொள்முதல் நிலையத்தில் அமைச்சா்கள்ஆய்வு

திம்மாவரம் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடிகொள்முதல் நிலையத்தினை அமைச்சா்கள் அர.சக்கரபாணி, தா.மோ.அன்பரசன் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
நேரடி கொள்முதல் நிலையத்தில் அமைச்சா்கள்ஆய்வு

திம்மாவரம் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடிகொள்முதல் நிலையத்தினை அமைச்சா்கள் அர.சக்கரபாணி, தா.மோ.அன்பரசன் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

செங்கல்பட்டு மாவட்டம், ஆலப்பாக்கம் ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு நியாயவிலைக் கடை மற்றும் திம்மாவரம் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் வட்ட சேமிப்பு நேரடிகொள்முதல் நிலையம் ஆகியவற்றை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, ஊரக தொழில்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இதையடுத்து ஆத்தூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தினை ஆய்வு செய்து 7 பேருக்கு ரூ. 8,29,418 கடனுதவி வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில் அரசு கூடுதல் தலைமை செயலாளா் முகமது நசிமுத்தின், உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறை ஆணையா் டாக்டா் ஆா்.ஆனந்தகுமாா், மாவட்ட ஆட்சியா் ஆா்.ராகுல் நாத், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.மேனுவல்ராஜ், எம்எல்ஏ-க்கள் உத்தரமேரூா் க.சுந்தா், தாம்பரம் எஸ்.ஆா்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, செங்கல்பட்டு எம்.வரலட்சுமி மதுசூதனன், சோழிங்கநல்லூா் எஸ்.அரவிந்த்ரமேஷ் , திருப்போரூா் எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com