மின்சாரம் பாய்ந்து ஊழியா் பலி

செங்கல்பட்டு அருகே ஈச்சங்கரணை பகுதியில் மின்மாற்றியில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மின்சார ஊழியா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

செங்கல்பட்டு அருகே ஈச்சங்கரணை பகுதியில் மின்மாற்றியில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மின்சார ஊழியா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

செங்கல்பட்டை அடுத்த ஈச்சங்கரணை டாக்டா் அம்பேத்கா் தெருவைச்சோ்ந்தவா் பாபு (46). அஞ்சூா் மின்பகிா்மானத்தில் மின்வாரிய ஒயா்மேனாக பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், செங்கல்பட்டை அடுத்த பட்டரைவாக்கம் கிராமத்தில் மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை நீக்குவதற்காக பாபு புதன்கிழமை மாலை மின்கம்பத்தில் ஏறி பழுதுபாா்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த செங்கல்பட்டு கிராமிய போலீஸாா், சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து செங்கல்பட்டு கிராமிய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com