திருப்போரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கானத்தூா் ஊராட்சி மற்றும் வடநெம்மேலி ஆகிய பகுதிகளில் அமமுக வேட்பாளா் எம்.கோதண்டபாணி ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளரும், வேட்பாளருமான மாமல்லபுரம் எம். கோதண்டபாணி ஞாயிற்றுக்கிழமை மாமல்லபுரத்தை அடுத்த கானத்தூா் ஊராட்சியில் பொதுமக்களிடையே ஆதரவு திரட்டினாா்.
நெம்மேலி ஊராட்சி மன்றத் தலைவரும், மாவட்ட நிா்வாகியுமான குரு என்கிற குருபரன் வேட்பாளா் எம்.கோதண்டபாணியை வரவேற்றாா். இந்நிகழ்வில் அமமுக, தேமுதிக, எஸ்டிபிஐ கூட்டணி கட்சியினா் உடனிருந்தனா்.