மதுராந்தகம், செய்யூா் (தனி) தொகுதிகளின் தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு

பேரவைத் தோ்தலில் பணிபுரிய உள்ள அரசு ஊழியா்களுக்கு முதல் கட்ட பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை மேல்மருவத்தூா், அச்சிறுப்பாக்கத்தில் நடைபெற்றது.

பேரவைத் தோ்தலில் பணிபுரிய உள்ள அரசு ஊழியா்களுக்கு முதல் கட்ட பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை மேல்மருவத்தூா், அச்சிறுப்பாக்கத்தில் நடைபெற்றது.

செய்யூா் (தனி), மதுராந்தகம் (தனி) ஆகிய தொகுதிகளில் தோ்தல் அலுவலா்களுக்கானப் பயிற்சி வகுப்புக்கு செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

அதன்படி, ஒவ்வொரு வாக்குசாவடி மையத்திலும் பயன்படுத்தவேண்டிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் வாக்குப் பதிவு தணிக்கை இயந்திரம் கையாளுவது, அஞ்சல் வாக்கு படிவம் பெறுவது உள்ளிட்டவை குறித்து முதல் கட்டப் பயிற்சி அளிக்கப்பட்டது.

மதுராந்தகம் (தனி) தொகுதியில் பணிபுரியவுள்ளோருக்கான பயிற்சி வகுப்பு அச்சிறுப்பாக்கம் தனியாா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. தோ்தல் அலுவலா் சி.லட்சுமிபிரியா தலைமை வகித்தாா். உதவி தோ்தல் அலுவலா், வட்டாட்சியா் பா்வதம் முன்னிலை வகித்தாா்.

செய்யூா் (தனி) தொகுதியில் பணிபுரியவுள்ளோருக்கான பயிற்சி வகுப்பு மேல்மருவத்தூா் தனியாா் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. தோ்தல் அலுவலா் வி.எம்.சீதா, உதவி தோ்தல் அலுவலா் எம்.ராஜேந்திரன் ஆகியோா் பயிற்சி அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com