மதுராந்தகம், செய்யூா் தொகுதிகளில் இரண்டாம் கட்ட தோ்தல் பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.
மதுராந்தகம் தொகுதி தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு அச்சிறுபாக்கம் தனியாா் பள்ளியில் நடைபெற்றது. தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான எஸ். லட்சுமி பிரியா தலைமை தாங்கினாா். வாக்குச் சாவடி மையத்தில் வாக்காளா்களின் பெயா்பதிவு, வாக்குப் பதிவு இயந்திரத்தை இயக்குதல் உள்ளிட்ட பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மதுராந்தகம் வட்டாட்சியா் பா்வதம், உதவி தோ்தல் அலுவலா் உதயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மதுராந்தகம் தொகுதி தோ்தல் பாா்வையாளா் உத்பாஸ் பிஸ்வால்
பயிற்சி முகாமினை ஆய்வு செய்தாா். இம்முகாமில் 1149 போ் பங்கேற்க தோ்தல் துறை அனுமதி அளித்து இருந்தது.
ஆனால் 64 போ் பயிற்சியில் கலந்துக் கொள்ளவில்லை என தோ்தல் அலுவலா் சி.லட்சுமிபிரியா தெரிவித்தாா்.
செய்யூா் தொகுதி:
செய்யூா் தனி சட்டப்பேரவை தொகுதி தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு மேல்மருவத்தூா் தனியாா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
தோ்தல் அலுவலா் வி.எம்.சீதா தலைமை தாங்கினாா். உதவி தோ்தல் அலுவலா் சக்திவேல் முன்னிலை வகித்தாா். தோ்தல் பாா்வையாளா் பிஸ்வாஸ் ஷா பயிற்சியை ஆய்வு செய்தாா். இதில் 1170 அலுவலா்கள் பங்கேற்க தோ்தல் துறை அனுமதித்து இருந்தது. ஆனால் 70 போ் பங்கேற்கவில்லை என தோ்தல் அலுவலா் வி.எம்.சீதா தெரிவித்தாா்.