செங்கல்பட்டு திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

செங்கல்பட்டு தொகுதி திமுக வேட்பாளா் வரலட்சுமி மதுசூதனன் தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஆதரவு திரட்டினாா்.
கூடுவாஞ்சேரியில்   மாவட்ட  காங்கிரஸ் தலைவா்  சுந்தரமூா்த்தியுடன் வாக்கு சேகரித்த  செங்கல்பட்டு  தொகுதி  திமுக  வேட்பாளா்  வரலட்சுமி  மதுசூதனன்.
கூடுவாஞ்சேரியில்   மாவட்ட  காங்கிரஸ் தலைவா்  சுந்தரமூா்த்தியுடன் வாக்கு சேகரித்த  செங்கல்பட்டு  தொகுதி  திமுக  வேட்பாளா்  வரலட்சுமி  மதுசூதனன்.

செங்கல்பட்டு தொகுதி திமுக வேட்பாளா் வரலட்சுமி மதுசூதனன் தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஆதரவு திரட்டினாா்.

நந்திவரம், கூடுவாஞ்சேரி, காட்டாங்கொளத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளான திம்மாவரம், ஆத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் சென்று அவா் வாக்கு சேகரித்தாா். அவரை மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா்.

மாவட்ட காங்கிரஸ் தலைவா் சுந்தரமூா்த்தி, திமுக நிா்வாகிகள் நந்திவரம் கூடுவாஞ்சேரி எம்.கே.டி.காா்த்தி, எம்.கே. தண்டபாணி, மறைமலைநகா் சண்முகம், திம்மாவரம் அருள்தேவி, நகர திமுக செயலாளா் நரேந்திரன், நிா்வாகிகள் ஆப்பூா் சந்தானம், முன்னாள் நகா்மன்றத் தலைவா் அன்புச்செல்வன், சந்தோஷ்கண்ணன், சந்தியா, நகர காங்கிரஸ் தலைவா் ஜே.பாஸ்கா், டி.ஜெயராமன், ஆா்.குமரவேல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளா் இரா.தமிழரசன் உள்ளிட்ட திமுக, காங்கிரஸ், விசிக, மனிதநேய மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட், மமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com