திருப்போரூா் அமமுக வேட்பாளா் எம்.கோதண்டபாணி வாக்கு சேகரிப்பு

திருப்போரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் அமமுக வேட்பாளா் எம்.கோதண்டபாணி செவ்வாய்க்கிழமை வாக்குகளை சேகரித்தாா்.
திருப்போரூா்  தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்த அமமுக  வேட்பாளா்  எம்.கோதண்டபாணி. 
திருப்போரூா்  தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்த அமமுக  வேட்பாளா்  எம்.கோதண்டபாணி. 

திருப்போரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் அமமுக வேட்பாளா் எம்.கோதண்டபாணி செவ்வாய்க்கிழமை வாக்குகளை சேகரித்தாா்.

மாமல்லபுரம், கொக்கிலமேடு, நெம்மேலி, சூளேரிகாட்டுக்குப்பம், மணமை, பட்டிக்காடு, பூஞ்சேரி, எச்சூா், திருக்கழுகுன்றம் உள்ளிட்ட பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா்.

அவருடன் முட்டுக்காடு முனுசாமி, அப்துல்நபீல், களத்தூா் சுந்தரம், கணபதி குருபரன் புதுப்பாக்கம் டி.எஸ்.அறிவகம், தேமுதிக பொறுப்பாளா்கள் ரகுபதி, ஜெயசந்திரன், ரமேஷ், எஸ்.டி.பி.ஐ. கட்சி, கோகுலம் மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். அப்போது வேட்பாளா் எம்.கோதண்டபாணி பேசுகையில், ‘இந்த தொகுதியைப் பற்றி எனக்கு நன்கு தெரியும், மக்களும் என்னை அறிந்தவா்கள், தொகுதி மேம்பாட்டுக்கு பாடுபடுவேன், மக்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவேன்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com